கழுகுமலையில் குடும்ப பிரச்சனை காரணமாக பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த விவசாயி✍️ முழுவிவரம்?விண்மீன் நியூஸ?
கழுகுமலை அருகே பூட்டிய வீட்டிற்குள் விவசாயி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் பழனிச்சாமி (வயது 52). விவசாயி.இவருக்கு தனலட்சுமி (47) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவியும், மகளும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் பழனிச்சாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
வீட்டிற்குள் பிணமாக கிடந்தார்
இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது பழனிச்சாமி படுக்கையில் உடலில் துணியில்லாமல் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுகுறித்து கழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் இறந்து 4 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.