உலக செய்திகள்

இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி✍️இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணியர், உள்ளூர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி இந்திய ரூபாயையே பயன்படுத்தலாம் என அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

கொழும்பு: இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணியர் உள்ளூர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி இந்திய ரூபாயையே பயன்படுத்தலாம் என அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.

advertisement by google

இலங்கையில் ‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இலங்கையின் ரிசர்வ் வங்கி கவர்னர் வீரசிங்கே பேசியதாவது:

advertisement by google

இலங்கையின் மத்திய வங்கி இந்திய ரூபாயில் வர்த்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையை எடுத்து உள்ளது.

advertisement by google

எங்கள் நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலா பயணியரும் தங்கள் நாட்டு ரூபாயையே உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இதுதவிர இரு நாடுகள் இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் விரும்புகிறோம். இதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

advertisement by google

இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கை உட்பட 18 நாடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனுமதி அளித்து உள்ளது.

advertisement by google

இந்நிலையில் இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணியரும் நம் நாட்டு ரூபாயையே பயன்படுத்தலாம் என அறிவித்திருப்பது அந்நாட்டு சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுகிறது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button