கோவில்பட்டி அருகே தனியார் பஸ் – கார் மோதல் – மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு – 2 பேர் படுகாயம் , அந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் காயமுற்று சிகிச்சையில் இருந்த மாணவர் பலியானார். இதனால் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கீர்த்தி 23, செந்தில்குமார் 24, அஜய் 23, அருண்குமார் 21, சாத்துார் விக்னேஷ் 23 ஆகியோர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் கீர்த்தி ஓட்டிய காரில் நண்பர்கள் உடன் வந்தனர். கோவில்பட்டி, இளையரசனேந்தல் அருகே கார் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் கீர்த்தி, செந்தில்குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாயினர். விக்னேஷ், அருண்குமார் காயமுற்றனர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சையில் இருந்த விக்னேஷ் நேற்று இறந்தார்.இதன்மூலம் இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.