t

சிரித்த மனைவி, கொலைகாரனான பால் வியாபாரி..! புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மனைவியின் சிரிப்பால் கொலைகாரனான பால் வியாபாரி..! அதிர்ச்சி சம்பவம்*

advertisement by google

புதுச்சேரி மாநிலம் முத்திரபாளையம் பகுதியின் காமராஜர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. பால் வியாபாரியான இவருக்கு ரதிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், ரதிகலா உறவினர்களிடத்தில் நெருக்கமாக பழகுவதை விரும்பாத பாபு மனைவியை அடிக்கடி சண்டையிட்டு துன்பறுதி வந்துள்ளார்.

advertisement by google

மேலும், சாலையில் செல்பவர்களை சாதாரணமாக பார்த்தால் கூட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வந்த பின்னர் அதை கேட்டு நச்சரிப்பது பாபுவின் வழக்கம். கணவனின் தீராத கொடுமையினால் விரக்தி அடைந்து வந்த ரதிகலா சென்னையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விடுவாராம்.

advertisement by google

ஆனால், அப்போதும் மனைவி மீது சந்தேகப்படும் பாபு, சென்னையில் யாருடனாவது பழக்கம் இருக்குமோ என்று எண்ணி மீண்டும் சண்டையிட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று காலை பால் கறப்பதற்காக கணவன், மனைவி இருவரும் எழுந்துள்ளனர். அப்போதும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

advertisement by google

பேத்தி வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்..! 75 வயதில் போக்ஸோ வழக்கில் கைது

advertisement by google

இதனால் கோபித்துக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு வந்துள்ளார் ரதிகலா. சற்று நேரம் கழித்து அங்கு வந்த பாபு, உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு தெரிய வந்ததும் விரைந்து வந்த போலீசார் பாபுவை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

advertisement by google

தொடர்ந்து ரதிகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ரதிகலாவின் பார்வையிலும், செய்கையிலும் சந்தேகப்பட்டதால் அவரை கொலை செய்துவிட்டதாக பாபு தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ரதிகலாவின் உறவினர்கள் கூறும்போது, ரதிகலா உறவினர்களிடத்தில் நன்றாக பழகக்கூடியவர் என்றும் அவருக்கென்று செல்போன் கூட இல்லை என்றும் கூறினர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button