கோவில்பட்டியில் ஒட்டுனர்சங்கம்,சமூக அமைப்பு சார்பில் மாபெரும் ஆர்பாட்டம்
கோவில்பட்டியில் ஓட்டுனர் சங்கம் மற்றும் சமூக அமைப்பு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
கடந்த 2019 ஜூன் 6ம் தேதி மத்திய அரசு அறிவித்த படிக்காதவர்களுக்கும் டிரைவிங் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று அமல்படுத்திய சட்டத்தை, தமிழக அரசு உடனே அமலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், மக்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் எனவும், மோட்டார் வாகனஅபராத தொகையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஐந்தாம் தூண் நிறுவனர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி தமிழரசன், ஐஎன்டியூசி ராஜசேகர், பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம், காங்., நகர தலைவர் சண்முகராஜ், ஈராச்சி சுப்பையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.