t

பெண் யானையின் கோரை பற்களை திருடி வந்து விற்க முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசியதகவல்✍️பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள துணிக்கடையில் பரபரப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள துணிக்கடையில் பெண் யானையின் கோரை பற்களை திருடி வந்து விற்க முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசியதகவல் கிடைத்தது.

advertisement by google

இதையடுத்து, இன்று துணிக்கடை அருகே மாறு வேடத்தில் நின்றுகொண்டிருந்த வனத்துறையினர் அந்த கடைக்கு சந்தேகத்திற்கிடமாக வந்தவரிடம் சோதனை நடத்தியதில் பெண் யானையின் கோரை பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,
இதனைதொடர்ந்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில் சேத்துமடை அருகே உள்ள தம்பம்பதி மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் மணியன் என்பதும், இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் சென்ற போது இறந்து கிடந்த பெண் யானையின் மண்டை ஓட்டில் இருந்து யானையின் கோரை பற்களை எடுத்து வந்து வேட்டைக்காரன் புதூர் பகுதியில் உள்ள துணி கடை உரிமையாளர் மோகன்ராஜ் என்பவரிடம் விற்க முயன்றதும் தெரியவந்தது.
பின்னர், பற்களை திருடி வந்த மணியன் மற்றும் அதை வாங்க முயன்ற மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினர், வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button