பால் 40 நாட்களுக்கு கெடாமல் பதப்படுத்தும் தொழில்நுட்பம்!
போர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த பால் நிறுவனமான, டிரேஸ் மொன்ஜிடாஸ், ஒரு புதிய பால் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
இதன்படி, பாலை பதப்படுத்தினால் 40 நாட்கள் வரை மாட்டுப்பால் கெடுவதில்லை. வழக்கமான முறையில், இரண்டு வாரங்கள் வரை தான் பால் கெடாமல் இருக்கும். போர்ட்டோ ரிக்கோ விஞ்ஞானிகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து பெற்ற ஆலோசனைகளை கலந்து பயன்படுத்தியுள்ளனர்.
இந்த முறையில், பால், திடீரென அதிக அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்படுத்தப்படுகிறது. இதனால், பாலில் உள்ள கிருமிகள் கொல்லப்படுகின்றன. அதே சமயம் பாலின் சத்துக்களும், சுவையும் பாதிக்கப்படுவதில்லை. ‘மில்லி செகண்ட் மெத்தெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தால், போர்ட்டோ ரிக்கோ, பெருமளவுக்கு பாலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்