வாடிக்கையாளர்கள் கடன் வசூலிப்பு புகார்!! பஜாஜ் பைனான்ஸ்க்கு 2.5கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கடன் வசூலிப்பு புகார்!! பஜாஜ் பைனான்ஸ்க்கு 2.5கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி!!?
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடன் வசூலில் அதிக கெடுபிடி காட்டுவதாகப் பல வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவித்திருந்தனர். அந்தப் புகாரை ஏற்று ரிசர்வ் வங்கி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு பஜாஜ் ஃபைனான்ஸ் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்களை நேரில் அழைத்து விசாரித்ததில் கடன் வசூலிக்கும் முறையில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது ஊர்ஜிதமானது. அதனால் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது!
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த இரண்டு நாள்களில் 4% வரை குறைந்துள்ளது!