சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கியை வைத்து இருந்த நபர் கைது✍️தென்காசி பன்பொழியில் பரபரப்பு✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கியை வைத்து இருந்த நபர் கைது
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழியில் உதவி ஆய்வாளர் திரு. சஞ்சய் காந்தி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது அப்பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் பணி புரியும் நபர் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டக்களையும் வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. சரஸ்வதி அவர்கள் மேற்படி நபரை விசாரணை செய்ததில் அவர் கற்குடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவரின் மகன் சங்கிலி(45) என்பதும் அவரின் மகனான பாலகிருஷ்ணன் என்பவர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை வாங்கி வந்து வைத்திருப்பதாகவும் கூறியதையடுத்து, பாலகிருஷ்ணன் மற்றும் சங்கிலி ஆகியோர் மீது
அச்சன்புதூர் காவல்நிலையத்தில் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சங்கிலி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்..மேலும் அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி சங்கிலி மற்றும் பாலகிருஷ்ணன் கடந்த 2015 ஆம் ஆண்டு புளியரை சரகத்தில் ஆட்டோவில் பயணம் செய்ய 6 பேரை லாரியை வைத்து மோதி கொலை செய்த வழக்கின் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது..