? மேட்டுப்பாளையம் யானை வேட்டையாட உதவிசெய்து தந்தங்களை கேரளாவுக்கு கடத்தி விற்பனை செய்த வன குற்றவாளி பாபுஜோஸ் பிடிபட்டான்…….
? மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆண் யானைகளையும் சிறுமுகை வனச்சரகத்தில் ஒரு ஆண் யானையையும் துப்பாக்கியால் சுட்டுக்
கொன்று, தந்தங்களை வெட்டி எடுத்துள்ளனர். சிங்கம் மற்றும் குபேந்திரன் இவர்களை ஏற்கனவே கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மூன்றாவது குற்றவாளியான பாபு ஜோஸ் வேட்டையாட உதவி செய்து, அவர்களிடம் தந்தங்களை பணம் கொடுத்து பெற்று, அதனை கேரளாவிற்கு கடத்தி விற்பனை செய்துள்ளார் என்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் தமிழ்நாட்டின் மற்ற வனப்பகுதிகளிலும் & கேரளா மாநில வனப்பகுதிகளிலும் இதுபோல் வேட்டையாடி உள்ளனர். …
கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் . தெபாஷீஷ் ஜானா, இ.வ.ப., மாவட்ட வனஅலுவலர் டி.வெங்கடேஷ்.இ.வ.ப. ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில்.
மேட்டுப்பாளையம் வனச்சரகர்
செல்வராஜ் தலைமையில், வனவர் ஸ்ரீராம், வனக்காப்பாளர்கள்
அண்ணாமலை,
கல்யாணசுந்தரம், தர்மராஜ்,
பிரகாஷ் & வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர்கள் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பதுங்கி இருந்த பாபு ஜோஸ் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டு விசாரணை நடத்தி, பின்பு மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் அவர்கள் முன் ஆஜர்படுத்தி, பின்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்…..
?winmeennews.com✍