கீழடி
இதுநாள் வரை பண்டைய நகர நாகரீகம் என்றால் அது கங்கை நதி சமவெளி நாகரீகம் தான் என்ற வடநாட்டு சமஸ்கிருத ஆதரவுப் புரட்டு கீழடியால் உடைந்திருக்கு.
தமிழ் நகர நாகரீகத்துக்கு ஆதாரமாக இதுவரை நாம் எடுத்துக் காட்டிய எல்லா சங்க இலக்கிய குறிப்புகளையும் நிராகரித்தே வந்துள்ளது ஆரிய மயப்பட்ட இந்திய தொல்லையில் துறை.
அவர்களைப் பொறுத்தவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் அசோகர் வருகைக்கு முன் எழுத்து வரி வடிவமே கிடையாது என்பதே நிலைப்பாடு.
அதனால் தான் சங்க காலம் என்பதையே கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை என்று வரையறுத்து வைத்திருந்தனர்.
நம் அறிஞர்களும் ஆய்வாளர்களும் எத்தனையோ முறை அதை மறுத்துப் பேசினாலும் தொல்லியல் ஆய்வுகள் ஆதாரபூர்வமாக கிடைக்காத காரணத்தால், கிடைத்தாலும் மறைக்கப்படும் காரணத்தால், இந்த சண்டை தொடர்கதையாகவே இருந்தது.
இப்போ கீழடி ஆய்வு முடிவுகளால் அது உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.
சங்க காலத்தின் வரையறை, கிமு 3 ஆம் நூற்றாண்டு என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டு என்று நேரடியாக 300 வருடங்கள் பின்னோக்கி பயணித்திருக்கிறது.
மேலும் கீழடியில் கிடைத்தப் பொருட்களும், அங்கிருக்கும் சிதைந்த கட்டிடங்களும் அந்த இடம் ஒரு பண்பட்ட நகரமாக இருந்திருக்கிறது என்பதையும், பானை ஓடுகளில் கிடைத்த எழுத்துக்கள் சிந்து சமவெளி நாகரீகத்து ஆய்வில் கிடைத்த வரிவடிவங்களுடன் ஒத்துப் போகிறது என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆக,
1) சிந்து சமவெளி நாகரீகம் கிமு 3300ல் ஆரம்பிக்கிறது என்று இந்தியா ஒப்புக் கொண்டால் கீழடியும் அப்போதே ஆரம்பிக்கிறது என்பது உறுதியாகிறது.
2) சிந்து சமவெளி ஒரு நகர நாகரீகம் என்றால் கீழடியும் ஒரு நகர நாகரீகமாகிறது.
3) தமிழ் பிராமி எழுத்துமுறைக்கும் அசோகருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தமிழ் ஒரு சுயம்பு மொழி தான்
4) இது இரண்டிலும் ஆரியத்துக்கான எந்த அடிப்படையும் இல்லை. ஆகவே இது ஆரியர் வருகைக்கும் முன்னரே செழித்து வளர்ந்து இருந்த, எழுத்தும் படிப்பும் கொண்ட ஒரு நகர நாகரீகமே!!!
This is our great advantage against Hindutuva forces that evolves only around puranas.
We have all live proofs for all our Sangam poems.