கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, கடந்த 3ம் தேதி சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தான் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தான் 20 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை விட இப்போது நன்றாக உணர்வதாகவும், கொரோனாவைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.