இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பூக்களை வெச்சும் நோயை தீர்க்கமுடியும், எந்த நோய்க்கு என்ன பூ, எப்படி சாப்பிடணும் தெரியுமா? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? பூக்களை வெச்சும் நோயை தீர்க்கமுடியும், எந்த நோய்க்கு என்ன பூ, எப்படி சாப்பிடணும் தெரியுமா?

advertisement by google

பூக்களை வெச்சு நோய் தீர்க்க முடியுமா என்கிறீர்களா, அதற்கு தான் மலர் மருத்துவம் என்னும் பெயரே தனியாக உண்டாயிற்றே.

advertisement by google

பூக்களை கொண்டும் நோயை குணமாக்கமுடியும். சில வகையான ஆரோக்கிய குறைபாடுகளை வாய்ப்புண் முதல் மலட்டுதன்மை வரையில் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து விட்டால் அதை கை வைத்தியம் மூலம் சரிசெய்துவிட முடியும். தீரா நோயாக இருந்தாலும் பெருமளவு அதை கட்டுக்குள் வைத்துவிடவும் முடியும். இதற்கு தனியாக மருந்து தேவையில்லை.
உணவையே மருந்தாக்கி இக்குறைபாட்டை நீக்கும் மருத்துவ குணமிக்க பொருளையே உணவாக்கி எடுத்துகொள்ள வேண்டும். அப்படி எடுத்துகொள்ள கூடிய பொருள்களில் பூக்களும் மருந்தாக கூடும். அப்படி எந்த வகை பூக்கள் எல்லாம் என்னமாதிரியான குணங்களை கொண்டிருக்கிறது என்பதை தான் பார்க்க போகிறோம்.

advertisement by google

​ரோஜா பூ -வாய்ப்புண்

advertisement by google

துவர்ப்பு சுவை கொண்டது ரோஜா பூ. இதை நீரில் இட்டு காய்ச்சி குடித்துவந்தால் உடலில் ரணங்கள் ஆறக்கூடும். வயிற்றில் இருக்கும் வாயுக்களையும் உஷ்ணத்தையும் அகற்றி இதயத்துக்கு வலுவூட்டும். மலமிளக்கியாக செயல்படும். இதை நீரில் சேர்த்துதான் குடிக்க வேண்டும் என்று இல்லை. அப்படியே மென்று சாப்பிடலாம்.

advertisement by google

ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜா இதழ்களை பொடியாக்கியும் சாப்பிடலாம். ரத்த விருத்தி செய்யக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்தது. இவை அழகு பராமரிப்பிலும் சிறப்பாக செயல்படும்.

advertisement by google

​செம்பருத்தி பூ – இதயம்

advertisement by google

செம்பருத்தி பூ. தற்போது செம்பருத்தி தேநீர் மிக பிரசித்தமும் கூட. பெண்களுடைய சூதக நோய்க்கு அதிக நன்மை தரக்கூடியது. வெள்ளைப்படுதல், துர்நாற்றத்தோடு கூடிய வெள்ளைப்போக்கு, கர்ப்பப்பை உஷ்ணம் போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தி இதழ்களை ( மகரந்தம் தவிர்த்து) மட்டும் மென்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதயத்துக்கு பலம் கொடுக்கும். உடலில் சோர்வு இருக்கும் போது செம்பருத்தி பூ தேநீர் குடித்து வரலாம். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும்.

செம்பருத்தி அழகு பராமரிப்பில் குறிப்பாக கூந்தல் வளர்ச்சியில் அதிக பலன் தரக்கூடியது. இவை பக்கவிளைவும் பாதிப்பும் இல்லாத அருமருந்தான குணங்களை கொண்டது. ரத்தம் சுத்திகரித்து இதயம் வலுப்பெற உதவும்.

​ஆவாரம்பூ – நீரிழிவு

நீரிழிவு கட்டுப்படாமல் இருந்தால் அதை சிறப்பாக கட்டுப்படுத்தும் தன்மை ஆவாரம்பூவுக்கு உண்டு. நீரிழிவு வருவதற்கான அபாயம் இருந்தால் இதை குடித்து வந்தாலே நீரிழிவு அபாயத்தை தடுக்கலாம். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடியாக்கி சாப்பிடலாம்.

குழந்தை இல்லாத பெண்கள் இந்த பொடியுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைப் பேறு உண்டாகும். இது பெண்களின் கர்ப்பப்பை நோயையும் குணப்படுத்தும். ஆவாரம் பூக்களை போன்றே இதன் இலை, ஆவாரம் பூ பட்டை எல்லாமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

​மாதுளம் பூ – ரத்த மூலம்

மாதுளம் பூ பலவிதமான மருத்துவ குணங்களை தன்னுள் அடக்கி கொண்டிருக்கிறது. மாதுளை பூவை பாலில் வேகவைத்து குடித்து வந்தால் நரம்புகள் வலுவாகும். மாதுளை பூவை சாறெடுத்து அதில் 15 மில்லி அளவு எடுத்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூல உபாதை குறையும். சிகிச்சை எடுக்கும் போதும் இந்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

ரத்த மூலம் போன்றே சிறுநீரில் ரத்தம் கலந்து வந்தாலும் இதை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். மாதுளைம் பூவை போன்றே இதன் பட்டை, கொழுந்து, பிஞ்சு போன்றவையும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியிருக்கிறது.

​மல்லிகை பூ – வயிற்று பூச்சி

மல்லிகைப்பூ கூந்தலில் மட்டும் சூடிக்கொள்ள வேண்டிய பூக்கள் அல்ல. இதிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது. மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி நன்றாக காயும் வரை வைத்திருந்து பொடித்து வைத்துகொண்டு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி பூச்சி மருந்து தருவதுண்டு. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்க மல்லிகை பூவை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் பூச்சிகள் வெளியேறும். பூச்சிகளால் சருமத்தில் வெண் திட்டுகள் உண்டாக கூடும். அவையும் மறையக்கூடும்.

​நந்தியாவட்டை – கண்

பளீர் வெள்ளை நிறத்துடன் பார்க்கும் போதே கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கண் நோய், கண் கோளாறுகள் எப்போதும் தவிர்க்க நந்தியாவட்டை பூவை பயன்படுத்தலாம். ஓய்வில்லாமல் கண்களுக்கு வேலை தருவதால் கண்கள் சிவப்பு நிறத்தையும், கண் சூடு, கண் உஷ்ணம், கண் கட்டி போன்றவை உண்டாகிறது.

அவ்வபோது கண் சோர்வும் ஏற்படுகிறது. இதை எப்போதும் வராமல் தவிர்க்க நந்தியாவட்டை பூவை கண்களின் மீது வைத்து எடுத்தாலே போதும். கண் கோளாறு உண்டாகாது. இந்த பூவை அரைத்து சாறுடன் தாய்ப்பால் கலந்து விட்டால் கண்களில் அதிக சிவப்பு பிரச்சனை நீங்கும். கண் குளிர்ச்சியாக இருந்தாலே கண் பார்வை குறைபாடு இல்லாமல் பார்த்துகொள்ளலாம். அதை நந்தியாவட்டை மட்டுமே செய்கிறது.

மேற்கண்ட குறைபாட்டுக்காக பூக்களை மருந்தாக எடுத்துகொள்ளும் போது அளவோடு எடுத்துகொள்ள வேண்டும். இது குறித்து சந்தேகம் இருந்தால் மலர் மருத்துவம் குறித்த நிபுணரின் ஆலோசனையும் அவசியம். மேற்கண்ட பூக்கள் எல்லாமே நாம் அன்றாடம் பயன்படுத்தும் நம் அருகிலேயே இருக்கும் பூக்கள் என்பதால் இது குறித்து மட்டும் கொடுத்திருக்கிறோம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button