கோவில்பட்டியில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய சேர்மனின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், மின்வாரியத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சரண்டர் விடுமுறையை ஓராண்டுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாரியப்பன் தலைமை வகித்தார். பூல்பாண்டி முன்னிலை வகித்தார். சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.