தூத்துக்குடியில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது?வடபாகம் போலீசார் அதிரடி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடியில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது – வடபாகம் போலீசார் அதிரடி
✍தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி, முத்து கிருஷ்ணராபுரம், கல்லறை தோட்டம் அருகே கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்ததில், தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த எலியாஸ் மகன் பிரஜின்(வயது27), முருகேசன் மகன் அருண்குமார் (வயது27), தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் அந்தோணி கிங்ஸ்டன்(வயது25), திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் மகன் இஸ்மாயில்(வயது23) மற்றும் தூத்துக்குடி வடக்கு பத்ரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கற்குவேல் மகன் அருண்குமார் (வயது19) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் 5 பேரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட அங்கு ஆயத்தமாக இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.