தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை ?உயிர்குடிக்கும் தொற்றை கட்டுப்படுத்தாத அரசு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை –
உயிர்குடிக்கும் தொற்றை கட்டுப்படுத்தாத அரசு!
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,052 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,052 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,088 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,40,943 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 87,341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 80 லட்சத்து 44 ஆயிரத்து 447 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று 1,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் இன்று 448 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 363 பேருக்கும், சேலத்தில் 362 பேருக்கும், தஞ்சாவூரில் 239 பேருக்கும் இன்று தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் 5,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை ஒட்டுமொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 44,437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 31 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,052 ஆக அதிகரித்துள்ளது.