பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது*
கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டதில் எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவின்படி கள்ளச்சாராயம், கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி விஜயா (40) என்பவர் மது
விலக்கு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில் சாராய வியாபாரி விஜயாவை ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் தர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் பிரியா மற்றும் போலீசார் குற்றவாளி விஜயாவை கைது செய்து வேலூர் பெண்கள் மத்திய சிறையில்அடைத்தனர்.