கிரைம்

மகளை கல்யாணம் செய்தால் கடைசி வரையிலும் தானும் கள்ள தொடர்பில் இருக்கலாம் என நினைத்து இருவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெண்✍️காட்டுப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த, தொழிலில் அயராது பாடுபட்ட ஞானசேகரின் சடலம்✍️ தவறான நடத்தையால் குடும்பமே அழிந்த சோகம், குருவிநத்தம் பொதுமக்கள் ஆதங்கம்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

பசுவந்தனை அருகில் அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயில் எரிந்து கொண்டிருந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

advertisement by google

போலீசார் தீவிர விசாரணை :

advertisement by google

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஞானசேகரின் மனைவி சலைத்ராணிக்கும் 38கருப்பசாமி என்ற கார்த்திக்கிற்கும் 24

advertisement by google

இடையே நீண்டகாலமாக கள்ளஉறவு இருந்து வந்துள்ளது.

advertisement by google

மீன் வியாபாரியான ஞானசேகரன் தினமும் இரவில் தூத்துக்குடிக்குச் சென்று மினி லாரியில் மீன் வாங்கி வந்து மறுநாள் காலையில் டூவீலரில் பசுவந்தனை சுற்று வட்டார கிராமங்களுக்குச் சென்று மீன் வியாபாரம் செய்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இவை வெளியே செல்லும் நேரத்தை பயன்படுத்தி கொண்டனர் கார்த்திக்கும், , சலைத்ராணியும்.

advertisement by google

மகளுடன் காதல் :

advertisement by google

கள்ள உறவானது இப்படி போய்க்கொண்டிருக்கும் போது, கார்த்திக் சலைத்ராணியின் 15 வயது மூத்த மகளை காதலிப்பதாகச் சொல்லி 6 மாதமாகப் பேசிப்பழகி வந்துள்ளார். இது சலைத்ராணிக்கு தெரிய வர, முதலில் கோபப்பட, பிறகு தனது மகளை கல்யாணம் செய்தால் கடைசி வரையிலும் தானும் தொடர்பில் இருக்கலாம் என நினைத்து இருவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

advertisement by google

கள்ள உறவு :

சலைத்ராணியுடனான தொடர்பும், மகளுடனான காதலும் ஞானசேகரனுக்கு சில நாட்களுக்கு முன்பு தெரியவர, இருவரையும் கண்டித்துள்ளார். பிறகு ஒருநாள் சலைத்ராணியுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த ஞானசேகரன், இருவரையும் தாக்கியுள்ளார். சலைத்ராணியோ தன் மகளிடம் அவரை கொல்ல வேண்டும் என்று கூறி, ஒப்புதல் பெற்றுள்ளார்.

கொலை செய்ய திட்டம் :

பிறகு மூவரும் சேர்ந்து ஞானசேகரனைக் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர். ஒரு நாள் இரவில் பசுவந்தனை காட்டுப்பாதை வழியே தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஞானசேகரன் மீது காரை ஏற்றி கார்த்திக் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அதில், ஞானசேகரனுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த ஞானசேகரனின் வாயைப் பொத்தி கம்பியால் அடித்துக் கொலை செய்து அவரின் உடலை சாக்கில் மூட்டையாகக் கட்டி அச்சங்குளம் காட்டுப்பகுதியில் போட்டு பெட்ரோல் ஊத்தி தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button