தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி வானரமுட்டி காட்டுப்பகுதியில் கருவேல மரத்தில் சுடலைமுத்து என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

advertisement by google

கோவில்பட்டி அருகே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

advertisement by google

வானரமுட்டியையடுத்த காட்டுப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகேயுள்ள கருவேலமரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்ததாம். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வானரமுட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

advertisement by google

பின்னர் தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். விசாரணையில் அவர் வானரமுட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் சுடலைமுத்து(32) என்பதும், வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியதும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button