பறந்துச் சென்ற கிளி… துக்கம் தாளாமல் விபரீத முடிவெடுத்த சிறுமி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கூடலூர்: பறந்துச் சென்ற கிளி… துக்கம் தாளாமல் விபரீத முடிவெடுத்த சிறுமி!
?♈?கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சிறுமியின் உடலை நேற்று சடலமாக சொந்த ஊருக்கு அழுகையும் கண்ணீருமாக உறவினர்கள் கொண்டுவந்தனர்.
?நான்காம் வகுப்பு படித்து வந்த 10 வயதே ஆன இந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின.
?சிறுமியின் தற்கொலை குறித்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் ஒருவரிடம் பேசினோம், “கூடலூர் -ஓவேலி சாலை அரசுப்பள்ளி அருகில் வசித்துவருபவர் ராமசாமி. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 10 வயதான மகள் சுசித்ரா அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளனர்.
?இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டைவிட்டு வெளியே பறந்து சென்ற கிளி திரும்பி வரவில்லை. இந்த சோகத்தில் வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் சிறுமி.
?இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுச் சென்ற சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” என்றார்.
?சிறுமியின் தற்கொலை குறித்து அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், “பறந்துச் சென்ற கிளியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கிளி பறந்துச் சென்ற சோகத்தில் இருந்த சுசித்ரா மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்து இன்றைக்கு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்” என வேதனை தெரிவிக்கின்றனர்,”