சிறுமியிடம் சில்மிஷம்: வியாபாரி கைது
கோத்தகிரி அருகே, சிறுமியை சில்மிஷம் செய்ய முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையம், சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜவஹர்தீன்,43.
இவர், சக நண்பர்களுடன் சேர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து, சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை கொண்டு வந்து, கோத்தகிரி பகுதியில் வியாபாரம் செய்ய வந்தார்.
அங்குள்ள ஒரு வீட்டின் பின்புற வாசல் வழியாக சென்று, வீட்டில் இருந்த, 13 வயது சிறுமியுடன் தண்ணீர் கேட்டுள்ளார்.
அந்த சிறுமி, தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் நேரத்தில், சிறுமியை சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார்.
சிறுமியின் சப்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து, ஜவஹர்தீனை பிடித்து, ‘பொதுமாத்து’ கொடுத்து, அருகில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் விரைந்து சென்று, அவரை கைது செய்து, குன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.