இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா.

advertisement by google

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

advertisement by google

ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கான உரிமை மற்றும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்திடவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து செயல்களையும் தடுத்து நிறுத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிக்கப்பட்டு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

advertisement by google

இவ்விழாவிற்கு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா தலைமை வகித்தார்.சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன்.யோகா பயிற்சியாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் மற்றும் நன்னடத்தை அலுவலர் சுபாஷினி அனைவரையும் வரவேற்றார்.

advertisement by google

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர் காளியப்பன், மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் மணிமேகலை. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள்.உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button