தமிழகம்

ஊட்டியில் புலிகள் இறந்த விவகாரம்- புலிகளை கொன்று,பழிக்குப் பழி தீர்த்த மாட்டின் உரிமையாளர் கைது

advertisement by google

ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேரு நகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு அதன் மாமிசத்தை புலி உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.இதையடுத்து, புலிகளை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், உதகை அருகே அவலாஞ்சி அணை பகுதியில் 2 புலிகள் இறந்த விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் சேகர் (58) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.சேகரிடம் விசாரணை நடத்தியதில், அவரது மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொன்றதாக தெரியவந்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button