சென்னையில் மட்டும், 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் வாழ தகுதியற்றவை✍️இவற்றை மறு கட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, அமைச்சர் அன்பரசன் தெரிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
சென்னையில் 27,500 குடியிருப்புகள் வாழ தகுதியற்றவை!*
சென்னை-”சென்னையில் மட்டும், 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் வாழ தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை மறு கட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
சென்னையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய, சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில், மறு கட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிக்கும், 256 குடியிருப்புதாரர்களுக்கு, கருணைத் தொகையாக, 61.44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.அப்போது, அவர் பேசியதாவது:இந்த திட்டப்பகுதி கட்டப்பட்டு, 48 ஆண்டுகளாகிறது.
குடியிருப்புதாரர்களுக்கு, ஒரு வீடு 415 சதுர அடி பரப்பளவில், 300 வீடுகள் 40.13 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய, புதிய அடுக்குமாடி குடியிருப்பு, 15 மாதங்களில் கட்டித்தரப்படும்.சென்னையில், 20 ஆண்டுகள் கடந்த அனைத்து திட்டப்பகுதிகளின் குடியிருப்புகளை ஆய்வு செய்து, அறிக்கை பெறப்பட்டது. சென்னையில் மட்டும், 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளது கண்டறியப்பட்டது.
இரண்டு ஆண்டுகளில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 15 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், மறு கட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், எம்.பி., தயாநிதிமாறன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.