திமுகவில் மாற்றம், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
பொதுக்குழு எப்போதுஇந்த இரண்டு பதவிகளுக்கான தலைவர்களை தேர்வு செய்வதற்காக செப்டம்பர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது.
முன்னாள் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைவை தொடர்ந்து கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவி துரைமுருகனுக்கு கிடைக்குமா என்று கேள்வி எழுந்து வந்தது.
பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் ராஜினாமா செய்ததால் அந்த பதவியும் காலியானது.
தேர்தல் நடக்கும்இந்த நிலையில் திமுகவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது
இரண்டு பதவிகளுக்கும் போட்டியிடுவதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று திமுகவில் நடந்தது. மேலும் இதற்கான வேட்புமனு தாக்கல் கால அவகாசம் இன்று மாலை 4 வரை மட்டுமே வழங்கப்பட்டது. இந்த நிலையில் திமுகவின் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு சார்பாக விண்ணப்பிக்கப்பட்டது.
இரண்டு பேர்பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டது. மாலை 4 மணி வரை இரண்டு பதவிக்கும் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இவர்கள் இருவரின் வேட்பு மனு மீது வரும் 5ம் தேதி பரிசீலனை செய்யப்படும். அதன்பின் பொதுக்குழுவில் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால் திமுகவில் இவர்கள் இருவர் மட்டுமே இந்த இரண்டு பதவிக்கும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
போட்டியின்றி தேர்வுஅதனால் இவர்கள் இருவரும், போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.
1977 ஆம் ஆண்டிலிருந்து 33 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராக க. அன்பழகன் இருந்தார். தற்போது அந்த பதவிக்கு துரைமுருகன் தேர்வாக இருக்கிறார்.