தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் மூன்று ஆண்டுகளாக சீருடை வழங்கமால் இருப்பதை கண்டித்து, அரைநிர்வாண பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ✍️முழுவிவரம்?விண்மீன்நியூஸ்

advertisement by google

3 ஆண்டுகளாக சீருடை வழங்கமால் இருப்பதை கண்டித்து கோவில்பட்டியில் அரைநிர்வாண பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக சிஐடியூ தொழிற்சங்கத்தினர்

advertisement by google

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சீருடை வழங்கமால் இருப்பது மட்டுமின்றி, 4 ஆண்டுகளாக சீருடை தைப்பற்கான தையல் கூலியும் வழங்கப்படமால் இருப்பதாகவும்., அனைத்து தொழிலாளர்களுக்கும் விரைந்து சீருடை வழங்க வேண்டும், வழங்கப்படமால் இருக்கும் தையல் கூலியை வழங்க வேண்டும், மேலும் 14வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக பேசி முடிக்க வேண்டும், கோவில்பட்டி பணிமனை கிளையில் விடுப்பிற்கான விதிமுறைகளை சீர்படுத்த வேண்டும், இலவச மகளிர் பேருந்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பேட்டா வழங்கிட வேண்டும், பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கி விபத்துக்குள்ளாகும் போது போக்குவரத்து ஊழியர்கள் மீது பழிபோடுவதை நிறுத்தி விட்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும், பணியின் போது அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தாக்குதலுக்குள்ளாகும் நிலை இருப்பதால் போதிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை பணிமணை முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தினர் அரைநிர்வாண பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.செந்தில்வேல் ,சிவகுமார், சீனிவாசன், சுப்புராஜ், ஞானப்பிரகாசம், பிச்சைமணி, பாலமுருகன், உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button