தென்கொரியா ,உகாண்டா தலைவர்களுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரை என்ன – விண்மீன் நியூஸ்
✍?⚡தென்கொரியா, உகாண்டா தலைவர்களுடன் தொலை பேசியில் மோடி உரை
புதுடில்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசிய வாயிலாக உரையாடினார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் மற்றும் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினேன்.
கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் தங்களது முழு வலிமையையும் வழங்க ஒப்புக்கொண்டன. இவ்வாறு பிரதமர் மோடி பதிவேற்றியுள்ளார். .