மகனை தலைகீழாக கட்டி தொங்க விட்டு குடிபோதையில் அடித்த தந்தை – கைது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மகனை தலைகீழாக கட்டி தொங்க விட்டு அடித்த தந்தை – கைது
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில், தன் மகனைத் தாக்கி, சக கிராமவாசிகளின் முன்னிலையில் கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட தந்தை கைது செய்யப்பட்டார்.
52 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் நேற்று வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான்.
அவனை, கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் சரமாறியாக தாக்குகிறார். இரக்கமின்றி அச்சிறுவன் தாக்கப்படுவதைக் கண்டு, அந்த சிறுவன் கதறி அழுகிறான்.
இதுகுறித்து மேற்கு ஆக்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். நான்கு நாட்களுக்கு முன், தன் மனைவியுடன் சண்டையிட்ட அந்த நபர், தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகனை அவர் கயிற்றில் தலைகீழாகக் கட்டி கடுமையாக தாக்கியுள்ளார். நாங்கள் அவரை விசாரித்து வருகிறோம். அவர் இதுவரை தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரிக்கும் போது அவர் குடிபோதையில் இருந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.