புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு மேலான வார ஆட்டுச்சந்தை, அடிப்படை வசதிகள் இல்லாத புதியம்புத்தூர் ஆட்டுச்சந்தை,சேறும், சகதி சாக்கடையுமாக காட்சியளிப்பதாக புகார்
புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.வாரம் தோறும் வியாழக்கிழமை கூடும் இச்சந்தையில் எல்லா பொ ருட்களும் பொது மக்கள் வாங்கிசெல்வார்கள். சுற்றுவட்டார கிராமமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி செல்வார்கள்.நாளடைவில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யாமல் ஆடுகள் மட்டு மே விற்பனைக்கு வந்தன. வாரந்தோறும் இங்கு 2 ஆயிரம் ஆடுகளுக்கு குறை யாமல் விற்பனைக்கு வரும். வாரத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் குறையாமல் ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஆடு ஒன்றுக்கு சந்தை நுழைவு கட்டணமாக ரூ.40 சந்தை குத்தகைதாரர் வசூல் செய்கிறார். இந்நிலையில் இந்த சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி இல்லை. கழிப்பிட வசதிகள் கிடையாது. குறிப்பாக மழை காலங்களில் சந்தை சேறும், சகதியுமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி கள், பொதுமக்கள் சார்பில் கூறுகையில், இந்த சகதி க்குள் நின்று தான் வியா பாரிகள் ஆடுகளை விற்ப னை செய்ய வேண்டும். உடனடியாக சந்தை வளாகத்திற்குள் சரல் மண் அடித்து அங்கு நிலவி வரும் சுகாதாரக் கேட்டை சரி செய்ய வேண்டும். சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.