கோவில்பட்டியில் அஇஅதிமுக கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு✍️ கூட்டணிக்கட்சிதலைவர்கள் உட்பட, முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு
நெல்லைக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமானும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு எடப்பாடி பழனிசாமியிடம் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர்
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் என் கே பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன்,சின்னப்பன், அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், வினோபாலாஜி, அன்புராஜ்,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலர் சீனிராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபலால்,அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார் மாவட்ட மகளிரணி அணி துணை செயலாளர் சுதா(எ) சுப்புலெட்சுமி, அதிமுக நிர்வாகிகள் போடூசாமி, பழனிக்குமார் மற்றும் நகர ,ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.