ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடந்தே தீரும் “சீமான்” ஆக்ரோஷம்
ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
கோவாவில் நடைபெற்ற 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதனைப் பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 100க்கு 100 சதவீதம் அதிசயம், அற்புதம் நிகழும் என்றார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளதாவது:
ஆம்! அதிசயம் நிகழும்.’தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்.
சீமான்
ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்.இவ்வாறு சீமான் பதிலளித்துள்ளார்.