இந்தியா இந்துக்களைப்போன்றே முஸ்லீம்களுக்கும் சொந்தமானது- ரவிசங்கர் பிரசாத்
இந்தியா இந்துக்களைப் போன்றே முஸ்லீம்களுக்கும் சொந்தமானது – ரவிசங்கர் பிரசாத்.
இந்தியா இந்துக்களைப் போன்றே முஸ்லீம்களுக்கும் சொந்தமானது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பா.ஜக.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியுரிமைச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், குடியுரிமைச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு பொருந்தாது என்றும் இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் உரிய மரியாதையுடன் வசிக்கலாம் என்றும் கூறினார்.
முஸ்லிம்கள் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவராகவோ, தலைமை நீதிபதியாகவோ வந்தால் வரவேற்பதாகவும், முஸ்லீம்கள் பா.ஜ.க.வுக்கு வந்தாலும் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
8 லட்சம் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதில் முஸ்லிம்கள் பிரித்துப்பார்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.