உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு?
மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல்
டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல்
நாளை மறு நாள் முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கும்
ஜனவரி 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல்
மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 11-01-2020ல் நடைபெறும்
மாவட்ட, ஒன்றிய குழு துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020ல் நடைபெறும்
ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020ல் நடைபெறும்
கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை
ஊரக உள்ளாட்சித் தேர்தல்
வேட்பு மனு தாக்கல் – 09.12.2019
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – 16.12.2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை – 17.12.2019
வேட்பு மனுக்கள் வாபஸ் கடைசி நாள் – 19.12.2019
முதல்கட்ட தேர்தல் – 27.12.2019
2ம் கட்ட தேர்தல் – 30.12.2019
வாக்கு எண்ணிக்கை – 02.01.2020