கீழே கிடந்த நகைப்பையை காவல்நிலையத்திற்கு ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு?
கீழே கிடந்த நகைப்பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் கீழே கிடந்த பையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.
சாத்தாங்காடு காவல்நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரியும் கார்த்திகை செல்வன் தண்டையார் பேட்டையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது குப்பை தொட்டி அருகே கீழே கிடந்த பாலித்தீன் பை எடுத்து பார்த்துள்ளார். அதில் ஆறு சவரன் தங்க நகை, வாட்ச், பர்ஸ், பட்டுப்புடைவைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
அதனை எடுத்து சென்ற கார்த்திகை செல்வன் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதற்கிடையே நகை இருந்த பையை தவறவிட்டதாக பட்டாளத்தை சேர்ந்த விக்னேஷ் எனபவர் அதே காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும், அவரிடம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.