குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்னை கூட்டுபாலியல் வண்கொடுமை செய்த சிறுவர்கள் கைது ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகேயுள்ள சுற்றுலாத்தளமான, கைலாசகிரி மலைப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது நண்பர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது நண்பர்களையும் அழைத்து வந்து, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், மலைப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், இளைஞர்களின் நடமாட்டத்தை கண்டு, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரையும், கைது செய்த போலீசார், கைலாசகிரி காவல் நிலையத்தில் வைத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்