கண்ணீர் அஞ்சலி சுஜித் இருப்பாய் என்று நினைத்தோம் இறப்பாய் என்று நினைக்கவில்லை?
கண்ணீர் அஞ்சலி
இருப்பாய் என்று நினைத்தேன் இறப்பாய் என்று நினைக்கவில்லை
அதிசயம் ஆவாய் என்று நினைத்தேன் அரசியல் ஆவாய் என்று நினைக்கவில்லை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே உன்னை உயிருடன் புதைக்க உன் தந்தை வெட்டிய குழி..
ஐந்து நாட்களாய் உன்னை உயிருடன் மீட்க அரசு வெட்டிய குழி
இதில் யாரைக் குற்றம் சொல்ல இரண்டிலுமே விதி மட்டுமே ஜெயித்துக் கொண்டது
தண்ணீரே வராத ஆழ்துளைக் கிணற்றில் இந்த தேசத்தின் கண்ணீரை நிரப்பி விட்டு போயிருக்கிறாய்
அறியாத பருவத்திலும் பயன்படாத ஆழ்துளைக் கிண்றுகளை மூடுங்கள் என்று அறுவுறுத்தி விட்டுப் போயிருக்கிறாய் நீ…சாகவில்லை சரித்திரமாயிருக்கறாய்
உன் ஆத்மா சாந்தியடைய நாங்கள் பிராத்திக்கிறோம்
(அன்பு மக்களே எனக்காக அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை ஐந்து பேராய் ஊடகத்தின் முன் அமர்ந்து என் சாவை விவாதிக்காதீர்கள்) சுஜித்