புதிதாக கட்டப்பட்டு வரும் இந்தியபார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட, தேசிய சின்னத்தில் மாறுபாடு : மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்✍️ முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
தேசிய சின்னத்தில் மாறுபாடு : மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்*
புதுடில்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், 19.6 அடி உயரம், 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தாலான இந்திய அரசின் தேசிய சின்னத்தில் பல்வேறு மாறுபாடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில், 19.6 அடி உயரம், 9,500 கிலோ எடை உள்ள வெண்கலத்தாலான இந்திய அரசின் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சின்னத்தை திறந்த வைத்த பிரதமர் மோடி, அதன் பீடத்தில் இருந்த அசோக சக்கரத்திற்கு குங்குமம் வைத்து, பய பக்தியுடன் தொட்டு வணங்கினார்.
இந்நிலையில், புதிய பார்லிமென்டின் உச்சியில், அசோக சக்கர பீடத்தில், நான்கு சிங்கங்கள் நிற்கும் இந்திய அரசின் தேசிய சின்னத்தில் பலவித மாறுபாடுகள் இருப்பதாகவும், நான்முக சிங்கம் முன்பு போல் இல்லை எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலையில் உள்ள சிங்கங்கத்தின் மேற்பகுதிபற்கள், மார்பு பகுதி சற்று பருத்தும், ஆவேசத்துடன் கர்ஜிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பா.ஜ.,பதிலடி கொடுத்துள்ளது.