11வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, புழல் ஜெயிலில் அடைப்பு
சென்னை எம்கேபி நகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை,ஐஸ்கிரிம் கடை நடத்தி வந்தவர் புழல் ஜெயிலில் அடைப்பு.
சென்னையிலுள்ள எம்.கே.பி.நகர் வியாசர்பாடியில், பதினொன்று வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகர், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடியிலுள்ள அன்னைசத்யா நகரில் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.பாண்டியன் வயது70; தி.மு.க., 45வது வட்ட தலைவர். இவர், அதே பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, பதினொன்று வயது சிறுமி அதாவது 6 வகுப்பு படிக்கும் மாணவி , ஐஸ்கிரீம் வாங்க சென்றுள்ளார்.அப்போது, பாண்டியன், அச்சிறுமியிடம் ஆசைவார்த்தைக்கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி., நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நேற்று, பாண்டியனை பிடித்து விசாரித்தனர்.அப்போது, கடையின் உள்ளே, சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, பாண்டியனை காவல்துறையினர் ,போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.பெற்றோர்கள் விழிப்போடு இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டது. மாணவ மாணவிகளை பள்ளியிலிருந்து வீடு சேரும்வரை கண்காணிப்பது அவசியம் என்பது இதன் மூலம் தெரிகிறது.