எனக்கு தலைவழுக்கை ஆகும்போது நான்போகாத கோயில்குளம் இல்லை-சத்தியராஜ் பேட்டி
எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே , நான் போகாத கோயில் குளம் இல்லை.
சாமி! சாமி! என் தலைல எப்படியாவது முடியை வளர வை என்று சொல்லி உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களின் கோவிலிற்கும் சென்று வணங்கி விட்டேன்.
ஆனால் ஒரு சாமியும் என் வேண்டுதலை நிறைவேற்றவில்லை. தலைக்கு மேலே முடி வளர்ந்தபாடில்லை, மேலும் குறையவே தொடங்கியது. அப்பொழுது கருப்புச் சட்டைப் போட்ட தொண்டர் ஒருவரிடம் உரையாட நேர்ந்த போது என்ன பிரச்சனை சார் என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டுதுங்கனு சொன்னேன். அவர் கேட்டார் – நீங்கள் என்ன தொழில் பண்ணுறீங்க என்று. நான் சினிமாவிலே நடிக்கிறேன் சார் என்று சொன்னேன்.
முடி இல்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்?
சினிமாவில் தான் எல்லாரும் இப்போது டோப்பா வைத்துக் கொள்கிறார்களே நீங்களும் ஒண்ணு வாங்கி வைத்துக் கொள்ளலாமே, இதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள். நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகிறேன். ஆனா அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமோ என்று தெரியவில்லை. தலைக்கு உள்ளே இருக்கிற மூளையைக் கண்டிப்பா வளர வைக்கும். அப்படின்னு சொல்லி ஒரு சாமிக் கிட்டே அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமி பேரு தான் ஈ.வெ. ராமசாமி .பிறகு அவருடைய புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் அந்த உருவத்தைக் கும்பிடவில்லை. அவர் சொன்ன விஷயங்களையும், அவருடைய தத்துவார்த்தங்களையும் நுகர்ந்தேன், தலைக்கு மேலே முடி வளர்வதைப் பற்றிய கவலை அகன்றது, தலைக்கு உள்ளே சற்று அறிவு வளர்ந்து விட்டதாக நம்பிக்கை பிறந்தது ! “
தோழர் சத்யராஜ்