இந்த போஸ்டரை பார்த்து எச்.ராஜா எக்கசக்கமாக கொதித்து போயுள்ளார்
இந்த போஸ்டர் எப்படி எச்.ராஜா கண்ணில் பட்டது என்று தெரியவில்லை. எக்கச்சக்கமாக கொதித்து போய் கிடக்கிறார்!
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கட்சியின் மூத்த தலைவர் ஆவார். கட்சி தலைமையுடன் நெருக்கத்தில் உள்ளவர்.. செல்வாக்கை பெற்றிருப்பவர்! இருந்தாலும் தமிழக அளவில் இவரது செல்வாக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. இதை எம்பி தேர்தல் தோல்வியே பறைசாற்றி உள்ளது. ஆனால் இவருக்கு ஒரு நிரந்தர எதிரி உண்டென்றால் அது ப.சிதம்பரம்தான். சிதம்பரத்தின் ஊழல்களை புட்டு புட்டு வைத்தவர்.. அவரது குடும்பத்தை ஓயாமல் விமர்சித்தே வந்த நிலையில், இன்று சிதம்பரம் திகாருக்கே சென்றுவிட்டார்.அப்போதும், அவரது கைது குறித்தும், அவரை போலவே வேறு சிலரும் கைதாவார்கள் என்பது குறித்தும் எச்.ராஜா அடிக்கடி ஆரூடம் சொல்லி வருகிறார். இந்நிலையில், ஒரு போஸ்டர் எச்.ராஜா கண்ணில் பட்டுள்ளது. இதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி அதில் ப.சிதம்பரத்தை கடவுளாக அதாவது கிருஷ்ணரை போல சித்தரித்து காங்கிரஸ்காரர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். எதற்காக இப்படி ஒட்டினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை நேற்று சிதம்பரமத்துக்கு பிறந்த நாள் என்பதால் இப்படி ஒட்டியிருக்கலாம் என தெரிகிறது.ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கிருஷ்ண பரமாத்மா போல் சித்தரித்து காங்கிரஸ் போஸ்டர் ஒட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை இழிவு படுத்தியதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். @4 @7 @ @18 ../119
—(@)17, 2019அந்த போஸ்டரில் கிருஷ்ணர் கெட்-அப்பில் வழக்கமான கண்ணாடி அணிந்து நிற்கிறார் ப.சிதம்பரம். பக்கத்தில் ராகுல், சோனியா காந்தி, போட்டோக்கள் சிறிய அளவிலும், பெரிய அளவில் கார்த்திக் சிதம்பரம் போட்டோவும் உள்ளது. அதில், கல்விக்கடன் வழங்கியும், பயங்கரவாதத்திலிருந்து பாரதத்தை காத்திடும் எங்களின் கடவுளே” பல்லாண்டு வாழ்க” என்று அச்சிடப்பட்டுள்ளது.இதை பார்த்துதான் எச்.ராஜா டென்ஷன் ஆகியுள்ளார். இந்த போஸ்டரை எடுத்து போட்டு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் எச்.ராஜா. அதில், “ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கிருஷ்ண பரமாத்மா போல் சித்தரித்து காங்கிரஸ் போஸ்டர் ஒட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை இழிவு படுத்தியதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று காட்டமாக கூறியுள்ளார்.*