அமைச்சர் கடம்பூர்ராஜுக்கு கழுகுமலை நகரஅதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு
கழுகுமலைக்கு வந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜீக்கு கழுகுமலை நகர அதிமுக சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கழுகாசலமூர்த்தி குடவரை கோயிலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கழுகுமலையில் குடிநீர் சம்பந்தமான குறைகளை உடனே சரி செய்யுமாறு பேரூராட்சி அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதில் கழுகுமலை அதிமுக நகர செயலாளர் முத்துராஜ், ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், அவைத்தலைவர் காளிமுத்து, பொருளாளர் சுந்தரப்பன், கயத்தார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர் மாரியப்பன், வள்ளிநாயகபுரம் கிளை செயலாளர் பாலமுருகன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராமசுப்பு, தொழிலதிபர் முத்தால்ராஜ், அம்மா பேரவை காமராஜ், குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.