தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது -5 வாகனங்கள் பறிமுதல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது -5 வாகனங்கள் பறிமுதல்
✍தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் காணாமல் போய் கொண்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது, அதனடிப்படையில் போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ஆதில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்ததில் மேலச் சண்முகபுரத்தை சேர்ந்த முருகன் மகன் பிரதீப் (வயது35) என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை திருடியது பதிவாகியிருந்தது, அவரை பிடித்து விசாரித்ததில் ஏரலை சேர்ந்த சின்னத்துரை மகன் ஐயப்பன் (வயது30) மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த 3 ஸ்பெலண்டர், 1 பஜாஜ் காலிபர், 1மேக்ஸ் 100, என மொத்தம் 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தென்பாகம் காவல்நிலைய போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.