சென்னை கவர்னர் மாளிகை தர்பார் அரங்கிற்கு பாரதியார் பெயர் மாற்றம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு கல்வெட்டை திறந்து வைக்க ஏற்பாடு
சென்னை : கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய பெயர் பலகையை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, 6ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 5ம் தேதி மாலை சென்னை வருகிறார். கவர்னர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
அன்று இரவு, 7:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு, ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்’ எனப் புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் ஜனாதிபதி கலந்து கொண்டு, புதிய பெயர் பலகையை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, பழங்குடியின மக்கள், தமிழறிஞர்கள், சாதனையாளர்கள் போன்றோருக்கு அழைப்பிதழ் அனுப்ப, கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த அரங்கில் தான், அமைச்சர்கள், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.