கோவில்பட்டியில் KR எக்ஸ்போர்ட் மற்றும் கல்வி நிறுவணங்கள் சார்பில் அரிசிபை,உணவுப்பொருட்கள் வழங்கள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி அருகே கே ஆர் எக்ஸ்போர்ட் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கல்
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி, படர்ந்தபுளி, தோணுகால், வடக்கு கங்கன்குளம் மற்றும் தெற்கு கங்கன்குளம் பகுதியில் கே.ஆர் எக்ஸ்போர்ட் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 200 பேருக்கு அரிசி பை வழங்கப்பட்டது..கே.ஆர் எக்ஸ்போர்ட் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.
இதேபோன்று படர்ந்தபுளி, தோணுகால், வடக்கு கங்கன்குளம் மற்றும் தெற்கு கங்கன்குளம் கிராமங்களில் உள்ள 850 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1750 கிலோ கோதுமை கே.ஆர் எக்ஸ்போர்ட் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஜெனரேஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் வழங்கினார்.