கோவில்பட்டியில் திமுக கட்சியின் தோணுகால் படந்தபுளியின் ராமானுஜம் ஏற்பாட்டின் பேரில் 450 குடும்பங்களுக்கு அரிசி , மளிகை பொருள்கள்,காய்கறிகள் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தலைமையில் நலத்திட்டம் வழங்கப்பட்டன?முழுவிவரம்-விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி அருகே திமுக சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கல்
கோவில்பட்டி அருகே உளாள தோணுகால், படர்ந்தபுளி கிராமங்களில் திமுகவைச் சேர்ந்த ராமானுஜம் கணேஷ் ஏற்பாட்டின் பேரில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி. மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இதில் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு 450 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். இதில் திமுக கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி , தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ரேவதி ஜெயகண்ணன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தாமோதர கண்ணன், செல்வ மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ராஜன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அன்ன ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ், கிளை செயலாளர்கள் தோணுகால் ரகுராமன், குருசாமி படர்ந்தபுளி சௌந்தர்ராஜ், வீரபாண்டி, ஆலம்பட்டி பன்னீர்செல்வம், கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.