பிரதமர் மோடி உரையின் முழுத்தொகுப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
விண்மீன்நியூஸ்
கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது: பிரதமர் மோடி உரை
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 3-வது முறையாக நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா பரவலை தடுக்க நீட்டிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
முதல் ஊரடங்கு உத்தரவின்போது தேவைப்பட்ட கட்டுப்பாடுகள், இரண்டாவது முறை தேவையில்லை என்று உறுதியாக நம்பினேன். அதேபோலத்தான் மூன்றாவது முறை ஊரடங்கின்போது போடப்பட்ட கட்டுப்பாடுகள் நான்காவது முறை தேவைப்படாது என்று நம்புகிறேன். என்று முதல்வர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்களுக்கு 3-வது முறையாக உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;
கொரோனா தொற்றுக்கு எதிராக 4 மாதங்களாக போராடி வருகிறோம்.
உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மண்டியிட வைத்துள்ளது.
இந்திய ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடக்கூடாது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.
மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு.
கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
கொரோனா பாதிப்பால் இந்தியா ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. தற்போதைய நெருக்கடி இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.
உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்திய கலாச்சாரம் வலியுறுத்தி வருகிறது
கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.
மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன. தற்போது
2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன.
யோகாசனம் இந்தியா உலகிற்கு அளித்த பரிசு ஆகும்.
கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.
[5/13, 6:04 PM] விண்மீன்நியூஸ்3:
உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் விற்பனை, உள்ளூர் விநியோகம் – இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்: பிரதமர் மோடி
வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பி விட்டது; இந்தியா அளித்துள்ள மருந்துகள் உலகில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்: எதையும் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளது. உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்திய கலாச்சாரம் வலியுறுத்தி வருகிறது. வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பி விட்டது. இந்தியா அளித்துள்ள மருந்துகள் உலகில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.