பள்ளிமாணவி எரித்து கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
பள்ளி மாணவி எரித்து கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
இது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுர் அருகே உள்ள சிறு மதுரை கி.ராமத்தை சேர்ந்த ஜெயபால் இவரது மகள் ஜெயஸ்ரீ வயது 15 பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ள இன் நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொழுத்திய மனித மிருகங்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது .
மேலும் விட்டிலிருந்து புகை வந்துள்ளதை பார்த்து பதறி போன அக்கம் பக்கத்தினர்கள் உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்த உள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .
அரசு மருத்துவ மனையிலிருந்து ஜெயஸ்ரீ மரண வாக்கு மூலம் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ஜெயஸ்ரீயை படு கொலை செய்த இரண்டு நபரை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து உள்ளனர் .
ஜெயஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் .
உயிரிந்துள்ள ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை ரூ 5 லட்சம் வழங்க படும் என முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் மேலும் கூடுதலாக ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
எனவே : கொடூரமான முறையில் படு கொலை செய்த குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .