எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா வைரஸால் இருவர் உயிரிழப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
♦கொரோனா வைரஸ்- எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு!..
?இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. நோய் பரவல் காரணமாக ஊரடங்கு வரும் மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
?இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதை உறுதிசெய்ய காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
?இந்நிலையில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் துணை ராணுவப் படை வீரர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது எல்லைப் பாதுகாப்பு படையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
?இறந்த வீரர்களில் ஒருவர், தனது வழக்கமான சிகிச்சைகாக மருத்துவமனைக்கு சென்ற போது கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், மற்றொருவர் உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
?ஆனால் அவர் இறந்தபின் நடத்திய ஆய்வில்தான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
?இந்நிலையில் எல்லைப்பகுதிகளில் வீரர்களை தனிமைப்படுத்துதலுக்கான மையங்களை ஏற்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
?திரிபுராவில் கடந்த 5 நாட்களில் இதுவரை 54 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
?மேலும் இந்தியாவில் இதுவரை 193 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 வீரர்கள் குணமடைந்துள்ளனர்.