திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு காவல்துறை விசாரனை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
☯திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு!
காவல்துறை விசாரணை
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை அருகே டாஸ்மாக் மதுபானக் கடை அருகே மது அருந்திய ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக 44 நாள்களாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், காலை முதலே மது குடிப்பவர்கள் 2-3 கி.மீ தூரத்துக்கு வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இந்தநிலையில், திருச்சி மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில் உள்ள மது அருந்தி விட்டு படுத்திருந்தவர் உயிரிழந்துள்ளார். மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று மலைக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.