கோவில்பட்டி சமத்துவமக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகணேஷ் அவர்கள் சார்பில் 1000 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகமே கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசியல் கட்சிகள் ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நிறுவன தலைவர் சரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலில் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் கோவில்பட்டி செக்கடி தெரு பகுதிகளில் 1000 ஏழை, எளிய மக்களுக்கு மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்.நிகழ்ச்சியில் நகர தொண்டரணி செயலாளா் S.சரத் சங்கா் நகர இளைஞா் அணி பரணி சதீஷ் உடன் இருந்தனா் .